Monday, July 23, 2012

கரைந்து போன சுவடுகள் :)

தொடவியலா தூரத்தில் நீ இருக்க

நினைவு பாதையில் தொலைந்தவளுக்கு

அமுதமாய் கிடைத்தது

முதலில் நீ அனுப்பிய மடல் ஒன்று J



நீ தந்த பரிசுகள்

ஒவ்வொன்றாய் அடுக்கி பார்க்கிறேன்

அழகற்று நிற்கிறது அனைத்தும்

தனியாய் தெரிகிறது என் நிழல்
எனக்கே அந்நியமாய்
மற்றபடி எல்லாம் இயல்பாய்


யாரும் இல்லா தனி இரவில் ,
மௌன வலியாய்

உணர்கிறேன்

என் மீதான என் கோபங்களை ! J


சரி என்றிருக்கலாம் .. விரைந்து வந்திருக்கலாம் …

சிந்தித்தேன் , சிதறினேன் , சிரித்தேன் J

No comments: